• +91 9385201453
  • dbdeepagam@gmail.com
Logo

Director Speaks

இதயம் சார்ந்த கல்வி

Monday, June 2, 2025

 

தீபகத்திலிருந்து இறையாசீர் !

 

புதிய கல்வியாண்டிற்கான தொன் போஸ்கோ நம்பிக்கை மற்றும் மதிப்பீடுகளின் மறைப்பணி மையத்திலிருந்து வாழ்த்துக்கள்.

 


இப்புதிய கல்வியாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும். எதிர்நோக்கான கனவுகளுடனும் தொடங்கும் இந்தக் கல்வியாண்டில் நம் மாணவர்களுக்கும், ஆசிரியர் பொதுமக்களுக்கும், பெற்றோர்களுக்கும், புதிய சலேசிய பங்கு தந்தையர்களுக்கும், ஞாயிறு மறைக்கல்வி ஆசியர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இப்புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் கடவுள் உங்கள் ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் நிறைவாக ஆசீர்வதிக்க நான் வேண்டுகிறேன். இக்கல்வியாண்டு நம்மை வெறும் கல்வியில் சிறந்தவர்களாக மட்டும் அல்ல, விசுவாசத்திலும், ஞானத்திலும் வளர வழிவகுக்கும் என வாழ்த்துகிறேன்.

 

‘சிறந்த கல்வி’ என்பது புத்தகங்களையோ, அல்லது தேர்வுகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, சிறந்த கல்வி ஒருவரை முழுமையான மனிதனாக உருவாக்குவதில் இருக்கின்றது என்றால், அது மிகையாகாது. “முழுமையான மனிதர்” என்பவர் யார் எனில், யார் ஒருவர் தாம் பெற்றக் கல்வியைக்கொண்டு உண்மை, இரக்கம், நீதி, சமத்துவம், அன்பு, நம்பிக்கை போன்ற நிலைத்த மதிப்பீடுகளில் வேரூன்றி வாழ்ந்து பிறருக்கு கற்பிக்கிறார்களோ, அவர்களே சிறந்த கல்வியாளர். சிறந்த கிறிஸ்தவர். 

 

நமது கல்வி நிலையங்களில் கற்றுக்கொண்ட இந்த மதிப்பீடுகளை பள்ளிகள், கல்லூரிகள், குடும்பங்கள், சமூகம் என ஒவ்வொன்றையும் சென்றடைந்து; ஒளியாக, உப்பாக, புளிப்பு மாவாக உலகை மாற்ற வேண்டும். கல்வி என்பது - இந்தப் பணியில் சோர்வடையாமல் நாம் வாழவும், பிறருக்கு கற்றுத்தரவும், நம்மை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

 

அன்பான ஆசிரிய பெருமக்களே! சலேசியர்களே! நமது சலேசியசபை ஒரு சிறிய மறைக்கல்வியோடு துவங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு மறைக்கல்வியைப் போதிப்பது என்பது அடிப்படையில் கிறிஸ்துவை அறிவிப்பதாகும். எனவே, தொன்போஸ்கோவைப் பின்பற்றி நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும், வாய்ப்புகளிலும், மறைக்கல்வியையும், கிறிஸ்துவத்தையும் அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளோம். "சிறந்த ஞானம்" என்பது கிறிஸ்துவை அறிந்திருத்தல். அதுபோலவே “உயர்ந்த மகிழ்ச்சி” என்பது இந்த பேருண்மையை அறிவித்தல் (ச.வி. 34). நம் பணி புனிதமானது.

 

நாம் பெறும் தகவல்களையும். அறிவையும் மட்டும் கற்பிக்காமல் புதிய சமூகத்தை உருவாக்கும் சிற்பிகளாகச் செயல்பட வேண்டும். “கல்விப்பணி”, தொன்போஸ்கோ கூறுவதுபோல “இதயம் சார்ந்தது”.  இதயங்களை அன்பாலும், பொறுமையாலும், உடன் இருப்பினாலும் மட்டுமே தொட முடியும். நமது புன்னகை, பொறுமை, இரக்கம், அன்பு, கடவுளின் ஞானம், பகுத்தாய்தல் ஆகியற்றின் மூலம் ஒரு திருப்பு முனையைக் கொண்டு வரமுடியும்.

 

சலேசியர்களே! இவ்வாண்டில் நம் உடனிருப்பை மாணவர்களிடையே நெருக்கமாக நடந்து நமது துறைகளில் ஒரு விளையாட்டு மைதானமாக, கற்பிக்கும் வகுப்பறைகளாக, கடவுள் அனுபவம் பெறும் கோவில்களாக மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு இருக்கும் இல்லங்களாக மாற்றுவோம். நல்ல நண்பர்களாக, நல்ல தந்தையர்களாக, நல்ல மேய்ப்பர்களாக அவர்களை வழிநடத்துவோம்.

 

அன்பு மாணவர்களே! பண்புடனும், தைரியத்துடனும், நம்பிக்கையுடனும், கடவுளின் ஆசீருடனும் இவ்வாண்டைத் துவங்க, தூய ஆவியானவர் நம் ஒவ்வொருவரையும் இக்கல்வியாண்டில் வழிநடத்துவாராக. 

 

என்றும் அன்புடன்,

 

அருட்பணி. ஜேசுதாஸ் ச.ச.
இயக்குநர்
தீபகம் – தொன்போஸ்கோ மறைபணி மையம்

 


Share: